சில்லி பாயின்ட்...

* கொரோனா பிரச்னை ஓய்ந்து மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும் வரை தரவரிசை பட்டியலை தற்போதுள்ள நிலையிலேயே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக உலக பேட்மின்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

* லக்னோவில் ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற இருந்த 84வது தேசிய சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பேட்மின்டன் சங்கம் அறிவித்துள்ளது.

* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், உடல்தகுதியை பராமரிக்க ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார்.

* 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய உடற்பயிற்சி திட்டத்தை பயிற்சியாளர்கள் நிக் வெப், நிதின் பட்டேல் வகுத்துள்ளனர்

Related Stories: