சென்னை: பூந்தமல்லி அடுத்த திருமழிசை, உடையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). கடந்த 28.04.2016 அன்று திருமழிசை ஜெகன்னாத பெருமாள் கோயில் அருகே ஆனந்தன் என்பவரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி. மேலும், 12.04.2016 அன்று திருமழிசை தெற்கு மாடவீதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பன் என்கிற பலராமன் (52) என்பவர் திருமழிசையில் உள்ள கோயில் மண்டபத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது தலையில் கல்லைப்போட்டு இவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் பாஸ்கர் என்ற பேரூராட்சி ஒப்பந்த ஊழியரையும், குடிபோதையில் வெட்டிக்கொலை செய்துள்ளார். இவ்வாறு ஆனந்தன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.