சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான நிதியுதவி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு, தனியார் ஊழியர்கள் பாதிக்காத வகையில் ஊதியம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.