சேலம்: ஆந்திர மாநிலம் குண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் ஹனுமேஷ்(30). பி.காம் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் சேலம் ரயில்ேவ கோட்டத்தில் உதவியாளராக பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணையுடன் சேலம் வந்தார். பின்னர், ரயில்வே கோட்ட முதன்மை அலுவலக சூப்பிரண்டு ஈஸ்வரனிடம், தன்னுடைய பணி நியமனத்திற்கான ஆணையை வழங்கினார். இதையடுத்து, அவர் அளித்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, பணி ஆணையில் அதிகாரிகளுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக, சேலம் கோட்டத்தில் பணியில் சேருபவர்களுக்கு, தென்னக ரயில்வே அலுவலகத்தில் இருந்துதான், நியமன ஆணை வழங்கப்படும்.