தண்டையார்பேட்டை: வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திக் (25). பாரிமுனையில் உள்ள பண பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது நிறுவனத்தில் இருந்து 18 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு உரிமையாளர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். பாரிமுனை மூர்தெருவில் வந்தபோது, 4 மர்ம ஆசாமிகள் அவரை வழிமடக்கி அடித்து உதைத்து பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.