நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து சவரன் ரூ.31,888-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்க்ததின் விலை ரூ.3,986-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்க முதலே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்தது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ரூ.25,600க்கு விற்கப்பட்டது.

தற்போது ஒரே ஆண்டில் (24ம் தேதி வரை) மட்டும் சவரன் ரூ.7728 அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 அதிகரித்தது. ரூ.32,568-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து சவரன் ரூ.31,888-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: