×

இடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கியில் மிகப்பெரிய அணை உள்ளது. இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 2500 அடிக்கு மேல் உயரம் உடையது. நேற்று முன்தினம் இரவு 10.15 மற்றும் 10.25 மணிக்கு உள்பட்ட நேரத்தில் இந்த பகுதியில் 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.  இதில் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வின் அளவு ரிக்டர் அளவு கோலில் பதிவாகவில்லை. என்றாலும் இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Earthquake ,Idukki ,panic , Earthquake ,dukki
× RELATED இடுக்கி பகுதியில் அனல் வெயிலால் கருகும் ஏலச் செடிகள்