தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை கூடத்தில் 4 மருத்துவர்கள், டெக்னீசியன், 2 துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். டாக்டர்கள் ஆலோசனைப்படி மருத்துவ பணியாளர்கள், இறந்தவரின் உடலை வெட்டி உடல் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்கள். கொலை செய்யப்பட்டவரின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் உள்ளன, அரிவாளால் வெட்டப்பட்டாரா?, கத்தியால் குத்தப்பட்டாரா என்பதை பிரேத பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கப்படும். அந்த உடல்கூறு அறிக்கையை டாக்டர் சொல்ல, சொல்ல இன்னொரு ஊழியர் அறிக்கையாக எழுதுவார்கள். இது தான் வழக்கமாக உள்ள நடைமுறையாகும்.