புதுடெல்லி: உத்தரகாண்டில் வக்கீல்கள் 35 ஆண்டாக அற்ப காரணங்களுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் உள்ளிட்ட 3 மாவட்ட வக்கீல்கள் கடந்த 35 ஆண்டுக்கு முன்பாக தனி உயர் நீதிமன்றம் கோரி சனிக்கிழமையில் ஸ்டிரைக்கை தொடங்கினர். பின்னர் உபி.யிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டு தனி நீதிமன்றம் வந்த பிறகும் கூட, இப்போராட்டம் தொடர்ந்தது. பாகிஸ்தான் பள்ளியில் வெடிகுண்டு வெடித்தது, தூரத்து உறவினர் மரணம் என அற்ப காரணங்களுக்காக அவர்கள் வாராவாரம் சனிக்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.