புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் பாலாஜி நகர் காந்தி பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த படிக்கட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் பாலாஜி நகர் காந்தி பிரதான சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் கடைகள் கட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி புழல் 22வது வார்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வார்டு இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து சாலையை ஆய்வு செய்தனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இயந்திரங்கள் மூலம் படிக்கட்டுகளை இடித்து அகற்றினர். மேலும் இந்த பகுதி சாலைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
புழல் பாலாஜி நகர், ஆதம்பாக்கம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- தொழில்களில்
- புல்ச்சா பாலாஜி நகர்
- ஆதம்பாக்கம் பகுதி சாலை
- மீள்குடியேற்றம் புல்ச்சா பாலாஜி நகர்
- ஆதம்பாக்கம் பகுதி