சென்னை: குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றனம் தீர்ப்பளித்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (25). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரது நண்பர், ஒரகடம் அடுத்த வட்டம்பாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் (30). கடந்த 11.11.2012 அன்று இரவு தீனதயாளன், மது அருந்துவதற்காக வேணுகோபாலை பனப்பாக்கம் அழைத்து சென்றுள்ளார். அங்கு தோப்பில் இருவரும் மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தீனதயாளன், அருகில் இருந்த கருங்கல்லால் வேணுகோபால் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.