வேளச்சேரி: செல்போன் கடையை உடைத்து, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி பிரதான சாலையில் செல்வம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. இந்த கடையை ஒரு வாரத்துக்கு முன்பாக மர்ம ஆசாமிகள் உடைத்து பணம், செல்போன்கள், பிரின்டர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.