×

செல்போன் கடையில் கொள்ளை சிறுவன் உள்பட 4 பேர் கைது

வேளச்சேரி: செல்போன் கடையை உடைத்து, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  வேளச்சேரி பிரதான சாலையில் செல்வம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. இந்த கடையை ஒரு வாரத்துக்கு முன்பாக மர்ம ஆசாமிகள் உடைத்து பணம், செல்போன்கள், பிரின்டர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள்  என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கெருகம்பாக்கம், ஆகாஷ் நகர், ஜான்சிராணி தெருவை சேர்ந்த சுரேஷ் (21), திருமுடிவாக்கம், கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தாஸ் (22), குன்றத்தூர், பெரியபனிச்சேரியை சேர்ந்த அருண் (22), மற்றும் கெருகம்பாக்கம் ஆகாஷ்நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை   கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 3 செல்போன்கள், ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை  கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : robbery Robbery , Cell phone, robbery, boy, 4 arrested
× RELATED பள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில்...