×

கோயில் உண்டியல் உடைத்த கொள்ளையனுக்கு தர்ம அடி

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு,  சிலம்பொலி நகரில் பிள்ளையார் கோயில் உள்ளது.  நேற்று முன்தினம் அதிகாலையில் கோயிலில் சத்தம் கேட்டதால், பொதுமக்கள், அங்கு சென்றனர். அப்போது 2 பேர், உண்டியலில் பணத்தை எடுப்பதை பார்த்து, அவர்களை சுற்றி வளைத்தனர். உடனே  பணத்தை போட்டுவிட்டு ஒருவர் தப்பிவிட்டார். ஒருவரைமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.  தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில்,  காயரம்பேடு அடுத்த களிவந்தபட்டு பகுதியை சேர்ந்த செல்வம் (30). தப்பி சென்றவர் கூடுவாஞ்சேரியை ராமு (32) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து உண்டியலில் கொள்ளையடிக்கப்பட்ட ₹3000, கத்தி, சுத்தியல், உளி, இரும்பு ராடு, முகமூடி, குல்லா, கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ராமுவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : robber , Temple bundle, robbery
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது