கோவை: கோவையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவை, சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவை ரயில் நிலையம் அருகே சப்தகிரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சப்தகிரி நிதி நிறுவன அலுவலகம், உரிமையாளரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை தனியார் நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
- வருமான வரி ஆய்வு
- கோயம்புத்தூர் தனியார் நிதி நிறுவனம் வருமான வரி ஆய்வு
- கோயம்புத்தூர் தனியார் நிதி நிறுவனம்