- வருமான வரி ஆய்வு
- கோயம்புத்தூர் தனியார் நிதி நிறுவனம் வருமான வரி ஆய்வு
- கோயம்புத்தூர் தனியார் நிதி நிறுவனம்
கோவை: கோவையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவை, சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவை ரயில் நிலையம் அருகே சப்தகிரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சப்தகிரி நிதி நிறுவன அலுவலகம், உரிமையாளரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேக்கரியில்
சோதனை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு விலக்கில், பிரபல தனியார் பேக்கரி உள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 5 பேர் கொண்ட குழுவினர், அருகிலுள்ள பேக்கரி உரிமையாளர் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டிக்கிடந்த நிலையில், மீண்டும் பேக்கரிக்கு திரும்பினர்.மாலை 4.30 மணி வரை, சுமார் 4.30 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கு வழக்குகளை சரிபார்த்தனர். சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.