சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் கோயில் உண்டியலில் ₹1 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்தன. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இரண்டாவது முறையாக இந்த மாதம் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  நேற்றுமுன்தினம் இரவு வரை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ₹1 கோடியே 21 ஆயிரத்து  233 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 924 கிராம் தங்கமும், 3 கிலோ 988 கிராம் வெள்ளி மற்றும் 211 வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories: