வத்திராயிருப்பு: அதிமுககாரனுக்கு கல் எறிய தெரியும். மண்டையை உடைத்துத்தான் மந்திரியாகியுள்ளேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் நடந்தது. திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிந்து முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: நான் சிறுவயதாக இருக்கும்போது யாரையாவது மண்டையை உடைத்து விட்டு வந்தால், எனது தாயார் என்னை வீட்டிற்குள் இருக்குமாறு செய்வார்.