சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த பாட்ஷா - சினேகா தம்பதியரின் குழந்தை கடத்தப்பட்டதாக சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணி, வளையல் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தம்பதி கடற்கரையில் உறங்கியபோது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பெசன்ட் நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு சாஸ்திரி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.