மதுரை : மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்துள்ளது. கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு திமுக பிரமுகர் முருகன் என்பவரின் மகன் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.