மதுரை : தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.