நீடாமங்கலம் அடுத்த கடம்பூரில் பாமணியாற்று பாலம் படுமோசம் மரண பயத்தில் பொதுமக்கள்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கடம்பூர் பாமணியாற்று பாலத்தில் கம்பிகள் இல்லாமல் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்திலிருந்து பாமணியாற்றில், ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் தஞ்சை சாலையில் இணைகிறது.

இந்த பாலம் வழியாக கடம்பூர், மேலகடம்பூர், பரப்பனாமேடு, வீரவநல்லூர், பூவனூர், மேலபூவனூர், மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நீடாமங்கலம் கடை தெருவிற்கு வந்து செல்ல இப்பாலத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல அந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டூவீலர்களி வாகனங்களில் இந்த பாலத்தில்தான் சென்று வருகின்றனர். அருகில் பாமணியாற்று பாலம் ஒன்று சித்தமல்லி சாலை பிரியும் இடத்தில் உள்ளது.

இந்த சாலை வழியாகவும் நீடாமங்கலம் வரலாம். இந்த சாலை சுற்று பாதை என்பதால் சைக்கிள், டூவீலர் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த கம்பியில்லாத பாலத்தில்தான் ஏரி சென்று வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வந்தால் இரவு நேரங்களில் இப்பாலத்தில் கடந்து செல்லும் மாணவர்கள், ஆற்றில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். இந்த கம்பியில்லாத பாலத்தில் விபத்து ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: