தமிழகம் நீடாமங்கலம் அடுத்த கடம்பூரில் பாமணியாற்று பாலம் படுமோசம் மரண பயத்தில் பொதுமக்கள் Feb 28, 2020 பொதுமக்கள் மரணம் கடம்பூர் பாலம் நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கடம்பூர் பாமணியாற்று பாலத்தில் கம்பிகள் இல்லாமல் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்திலிருந்து பாமணியாற்றில், ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் தஞ்சை சாலையில் இணைகிறது. இந்த பாலம் வழியாக கடம்பூர், மேலகடம்பூர், பரப்பனாமேடு, வீரவநல்லூர், பூவனூர், மேலபூவனூர், மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நீடாமங்கலம் கடை தெருவிற்கு வந்து செல்ல இப்பாலத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல அந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டூவீலர்களி வாகனங்களில் இந்த பாலத்தில்தான் சென்று வருகின்றனர். அருகில் பாமணியாற்று பாலம் ஒன்று சித்தமல்லி சாலை பிரியும் இடத்தில் உள்ளது. இந்த சாலை வழியாகவும் நீடாமங்கலம் வரலாம். இந்த சாலை சுற்று பாதை என்பதால் சைக்கிள், டூவீலர் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த கம்பியில்லாத பாலத்தில்தான் ஏரி சென்று வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வந்தால் இரவு நேரங்களில் இப்பாலத்தில் கடந்து செல்லும் மாணவர்கள், ஆற்றில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். இந்த கம்பியில்லாத பாலத்தில் விபத்து ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு