×

சாலை முழுமையாக அமைக்கப்படும் முன் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மதுரை : சாலை முழுமையாக அமைக்கப்படும் முன் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள போகலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை கோரி வழக்கறிஞர் முகமது ரஃபி மனு தாக்கல் செய்திருந்தார்.சாலைப்பணி முழுமையாக முடியாமலேயே சுங்கக்கட்டணம் வசூலிப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த மனு தொடர்பாக மத்திய அரசும், சுங்கச் சாவடியில் பணம் வசூல் செய்து வரும் கே.என்.ஆர். நிறுவனமும் பதில் தர உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


Tags : road ,Government ,Central ,Central Government , Customs, Central Government, Notices, Madurai Branch, Customs Booth, Road Works
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...