தமிழகம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம் Feb 28, 2020 திருவிழா மாசி திருச்சேந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதிஉலா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடர்ந்து 10ம் தேதி வரை நடக்கிறது. 10ம் திருவிழாவான மார்ச் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை 4.30 மணிக்கு கொடிப்பட்ட வீதிஉலா நடந்தது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி செப்பு ஸ்தலத்தார் சின்னசுப்பிரமணிய அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியே வீதிஉலா வந்து கோயில் சேர்ந்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தன், மாரிமுத்து, மேலாளர் விஜயன், அலுவலர் சித்தையா, மணியம் ரமேஷ், சாவடி சங்கரன், செல்லப்பா மற்றும் 14 ஊர் செங்குந்த முதலியார் உறவின் முறை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும் ஆபத்து… அரியமான் கடற்கரைப் பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகள்: அசுத்தமாகும் அழகிய சுற்றுலாத் தலம்
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர்: வனத்துறை ஏற்பாடு
சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார் அம்மன்; உடுமலையில் நடைபெற்று வரும் தேரோட்டத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கெடு
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிப்பு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!