தெஹ்ரான்: ஈரானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருவதால் அங்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 700 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது ஈரானையும் வாட்டி வதைக்கிறது. நேற்று வரை ஈரானில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 700 மீனவர்கள் அங்கேய தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.