சென்னை: தானமாக பெறப்படும் கல்லீரலை நவீன கருவி மூலம் நீண்ட நாள் பாதுகாத்து நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்துவது குறித்த மருத்துவர்களுக்கான கூட்டம் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் நடந்தது மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தலைமை வகித்தார். யூகே நாட்டின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரியா ஸ்லேகல், மியாட் மருத்துவமனை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இளங்கோ சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய சிகிச்சை முறை குறித்து மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன் தாஸ், யூகே நாட்டின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரியா ஸ்லேகல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: