×

என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாமகவின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடந்த பாமக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில்  இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

பீகார் மாநிலத்தைப் போலவே 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும்.அசாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி தயாரிக்கப்படாது, அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிமொழிந்திருப்பதும்  வரவேற்கத்தக்கவை.தமிழக சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Ramadas ,Council , NRC, Resolution, Council, Ramadas emphasis
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...