பேராசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : பேராசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  என பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழினத்தின் நிரந்தரப் பேராசிரியரும் - திமுக பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும் - தமிழ்நாட்டுக்கும் - திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரிய பெருமகனார் உடல்நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச்-1ம் நாள், நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனவே, கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன்வேண்டுகிறேன். தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியப் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: