வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாபராபாத், சந்த்பாக் பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராடிய சில மணி நேரங்களில் வன்முறை வெடித்து மோதல் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கற்கள் வீசப்பட்டதுடன் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டன. நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே வன்முறை தலைவிரித்தாடியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, டெல்லியில் உள்ள மக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: