சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: டெல்லி வன்முறை வெறியாட்டம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். வன்முறை வெறியாட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக இது குறித்து முழுமையான விசாரணை நடத்திட நீதி விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும். டெல்லி யூனியன் பிரதேச அரசு இது குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.