டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாடியுள்ளார். கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது.

இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர்; சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல், பிரியங்கா நடந்து கொள்கின்றனர்.

கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் படியே உச்சநீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். வடகிழக்கு டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வன்முறை தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.

Related Stories: