டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: