பதன்சேரு: தெலுங்கானாவில் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் கேட்டு போராடிய தந்தையை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பதன்சேருவில் உள்ள ஜூனியர் தனியார் கல்லூரி விடுதியில் சந்தியா ராணி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மனஅழுத்தம் காரணமாக சிறுமி மனச்சோர்வு அடைந்து, உடல்நிலை சரியில்லாமல் போனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்கொலை செய்துகொண்ட மகளின் உடலை பார்க்க வந்த தந்தை, மகளின் தற்கொலைக்கான காரணம் கேட்டு போராடினார்.