சென்னை: அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சிவமுத்து என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.