வாஷிங்டன்: அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து, ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. மாசந்தூர் வளாகத்தில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அந்த விடுதியில் வழக்கம் போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென உள்ளே புகுந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மதுபான ஆலையில் கூடியிருந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டு தள்ளினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இந்த நிகழ்வில் பலர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.