சென்னை: தமிழகத் துக்கான நெதர்லாந்து நாட்டின் கவுரவ துணைத் தூதராக கோபால் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகம் நேற்று வெளியிட்டது. சென்னையில் உள்ள டிவிஎஸ் கேபிடல் பண்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கோபால் சீனிவாசன் உள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம், மிச்சிகன் பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது நெதர்லாந்து நாட்டின் கவுவர துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வான்டென் பெர்க் கூறுகையில், ‘‘கோபால் சீனிவாசன் தமிழகத்துக்கான நெதர்லாந்தின் கவுரவ துணை தூதராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இதனால், தமிழகத்துடன் கடந்த 400 ஆண்டுகளாக நெதர்லாந்துக்கு இருந்து வந்த தொடர்பு நீடிக்கும்’’ என்றார்.