புதுடெல்லி: நாட்டை பாதுகாப்பதற்காக இப்போது எல்லையை தாண்டுவதற்கு இந்திய வீரர்கள் தயங்க மாட்டார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது.