சென்னை: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே லாரி மீது பஸ் மோதியதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பெண்கள் உள்பட 16 படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனியார் டிராவல்ஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி சீரான வேகத்தில் சென்றபோது திடீரென பிரேக் போட்டதால் லாரியின் வேகம் குறைந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத தனியார் பஸ் நிலைதடுமாறி லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த முத்துபெருமாள் (50), செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி (44) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள், 14 ஆண்கள் படுகாயமடைந்தனர்.