20 சவரன் கொள்ளை

அம்பத்தூர்: அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (68).  ஓய்வு பெற்ற தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த 20ம் தேதி ராமகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ராணிப்பேட்டையில் வசிக்கும் மகள் சித்ரா வீட்டுக்கு சென்றார். நேற்று காலை தம்பதி மீண்டும் திரும்பியபோது வீடு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: