சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடற்கரையை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. மெரினா கடற்கரையில் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலனை செய்த மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு இடங்களில் நடைபாதை அமைக்க அனுமதி அளித்துள்ளது. உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகே இந்த நடைபாதை அமைக்கப்பட உள்ளது.