தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டையில் குறுகலான தெருக்களில் குப்பைகளை அள்ளவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஐஓசி நிறுவனம் சார்பில் 7 பேட்டரி வண்டிகள் நேற்று மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. வடசென்னையில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுகலான சாலைகளில் குப்பைகளை அகற்றுவதற்காக மீன்பாடி வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் கொருக்குப்பேட்டை டெர்மினல் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பேட்டரியில் இயங்கக்கூடிய 2 மீன்பாடி ஆட்டோக்களையும், 5 மீன்பாடி சைக்கிள்களையும் குப்பைகளை அகற்றும் பணிக்கு சென்னை மாகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை கொருக்குப்பேட்டை ஐஓசி ெடர்மினல் வளாகத்தில் நடைபெற்றது.