அண்ணாநகர்: அண்ணாநகரில் மகள் திருமண கடனை அடைப்பதற்காக வேலை செய்த வீட்டில் 5 லட்சம் பணம் திருடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் லட்சுமி (40). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து கோவிந்த் (29) என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பாடியில் வாடகை வீடு எடுத்து ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி அண்ணாநகரில் உள்ள புஜ்ஜியம்மாள் (49) என்பவர் வீட்டுக்கு தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் புஜ்ஜியம்மாள் 5 லட்சத்தை துணியில் சுற்றி பீரோவில் வைப்பதை லட்சுமி நோட்டமிட்டுள்ளார்.