சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து சக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சந்திரா. இவர்களது மகன்கள் இசக்கிமுத்து (9), மாரிச்செல்வம் (7). பிரபாகரன், குடும்பத்துடன் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள பள்ளியில் இசக்கிமுத்து 4ம் வகுப்பும், மாரிச்செல்வம் 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் குடும்பத்துடன் சொந்த ஊரான சக்கம்மாள்புரத்திற்கு வந்துள்ளார். அவரது மகன்கள் இருவரும், நேற்று மாலை ஊர் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.