மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில் வரும் 28, 29, மார்ச்-1, 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதே தேதிகளில் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 2.45 மணிக்கு மூர் மார்க்கெட்டிற்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் பராமரிப்பு பணி காரணமாக நாளை (28ம் தேதி) திருவள்ளூரில் இருந்து காலை 3.50 மணிக்கு மூர் மார்க்கெட் புறப்படும் ரயில், புட்லூர், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய இடங்களில் நிற்காது. இதே நிறுத்தங்களில் அரக்கோணத்தில் இருந்து காலை 3.45 மணிக்கு மூர் மார்க்கெட் செல்லும் ரயில் நிற்காது. மேலும் அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு வேளச்சேரி புறப்படும் ரயில், திருவள்ளூரில் இருந்து காலை 4.55 மணிக்கு மூர் மார்க்கெட் புறப்படும் ரயிலும் நிற்காது.

Related Stories: