கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் சிலர் தெருக்களில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக புளியந்தோப்பு  இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (31) என்பதும், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பத்மா என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். தகவலின்படி ரயில்வே தண்டவாளம் பகுதியில் மறைத்து வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: