கள்ளக்காதலை கண்டித்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி

சென்னை: கணவருடனான கள்ளக்காதலை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் ஹிமிரா (21). தனது கணவரை பிரிந்து மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹிமிரா வீட்டின் அருகே உள்ள ஆட்டோ மொபைல் கடை ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார். அப்போது கடை அருகே உள்ள மெக்கானிக் மாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாரியின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே மாரியின் மனைவி புஷ்பலதா மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஹிமிராவை கண்டித்துள்ளனர்.

மேலும் ஹிமிரா மீது சிந்தாதிரிப்ேபட்டை காவல் நிலையத்தில் புஷ்பலதா மற்றும் மாரியின் தாயார் மந்தாரம் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதற்கிடையே மாரியுடனான கள்ளக்காதலை ஹிமிரா விடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியின் மனைவி புஷ்பலதா மீண்டும் ேநற்று முன்தினம் மாலை ஹிமிரா அவரது வீட்டிற்கு ெசன்று பொதுமக்கள் முன்னிலையில் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஹிமிரா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஹிமிராவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஹிமிரா கொடுத்த புகாரின்படி சிந்தாதிரிப்பேட்டை புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: