சென்னை: அண்ணாசாலையை சேர்ந்தவர் சுதாகர் (20). ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவரிடம் 17 வயது சிறுவன் கமிஷன் அடிப்படையில் வேலை செய்து வந்தான். சுதாகர் 100 கமிஷன் தராததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன் கத்தியால் சுதாகரை கிழித்துள்ளான். இதில் சுதாகருக்கு 19 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்அவுஸ் பெசன்ட் சாலை, நீலம் பாஷா தர்கா பகுதியை சேர்ந்த சிறுவனை கைது செய்தனர்.