கஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் 9வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வேலழகி (57). கஞ்சா வியாபாரி. இவர் கடந்த மாதம் 20ம் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மற்றும் பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் ஆஜராகி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட வேலழகியை பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வேலழகியை அடுத்த 142 நாட்கள் ஜாமீனில் வர முடியாத வகையில் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.அதேபோல் பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய  சரகத்தில் பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த சசிகுமாரை (21) 333 நாட்கள் சிறையில் அடைக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Related Stories: