இலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ 63.71 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த ஆரோக்கியமேரி (45) சுற்றுலா பயணியாக இலங்கை சென்று விட்டு வந்தார்.  அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளில் எதுவும் இல்லை. அவரை பெண் சுங்க அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக சோதனை நடத்தினர்.

அவருடைய உள் ஆடையில் 340 கிராம் தங்க கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.அதன் சர்வதேச மதிப்பு ₹15 லட்சம்.  ஆரோக்கிய மேரியை கைது செய்து அதே விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது (63),  கடலூரைச் சேர்ந்த முகமது அபுபக்கர் (47) சிவகங்ககையை சேர்ந்த சுந்தரப்பாண்டியா (48)  மூன்றுபேரும் ஒரு குழுவாக இலங்கை சென்றுவிட்டு வந்திருந்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களது உள் ஆடையில் 1.1 கிலோ தங்க கட்டிகள் மறைத்துருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு 48.71 லட்சம்,சுங்க அதிகாரிகள் மூன்று பேரையும் கைது செய்து நகைகளை கைப்பற்றி பறிமுதல்  செய்தனர்.

Related Stories: