சாகித்ய அகாடமி விருது பெறும் கே.வி.ஜெயஸ்ரீக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக  பணியாற்றி வருபவர். மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் பெயர்த்ததற்காக கே.வி.ஜெயக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாராட்டுகளையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது எழுத்துப்பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Related Stories: